பல வருடங்களாக தமிழகத்தில் இலங்கையர்கள் செய்து வந்த மோசமான செயல்!

சென்னையில் பல ஆண்டுகளாக தங்கியிருந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வந்த இலங்கையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையை சேர்ந்த இருவர் அடையாளத்தை மறைத்து, பாஸ்போர்ட் இல்லாமல் பல ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 15ஆம் திகதி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், ஒரு குடோனில் 45 கிலோ Ephedrine போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த காஜா மைதீன், சென்னையை சேர்ந்த காதர்மைதீன் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!