“பாணி” அருந்திய பவித்ராவுக்கும் கொரோனா!

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். துரித அன்டிஜென் சோதனையின் போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்தே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எனினும் பிசிஆர் சோதனை முடிவுகள் நேற்றிரவு வரை வெளியாகவில்லை.

ஆயுர்வேத மருத்துவர் தம்மிக பண்டாரவின் கொரோனா தடுப்பு பாணியை இவர் அருந்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!