இந்திய மீனவர்களின் சடலங்களை ஒப்படைக்க நடவடிக்கை!

நெடுந்தீவுக் கடலில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களின் சடலங்களையும், நடுக்கடலில் வைத்து இந்திய கரையோரக் காவல் படையினரிடம் கையளிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடற்படை ரோந்துக் கப்பலுடன் மோதியதில் உயிரிழந்த 4 மீனவர்களின் சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிசிஆர். பரிசோதனையின் பின் நேற்று உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது.

இதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் சடலங்கள் கையளிக்கப்பட்டு, அவர்களால் காங்கேசன்துறை எடுத்துச்செல்லப்பட்டு இலங்கை கடற் படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினர் அவற்றை எடுத்துச் சென்று இந்திய கரையோரக் காவல் படையினரிடம் கையளிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!