உதயங்கவுக்கு எதிராக முறைப்பாடு!

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

உதயங்க வீரதுங்கவினால் அழைத்து வரப்பட்ட உக்ரேன் சுற்றுலாப்பயணிகள் இலங்கையின் தொல்லியல் சட்டங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை பின்பற்ற தவறியுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது

சிகிரியா ஓவியங்களுக்கு முன்பாக படம் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த இடத்தில் உதயங்கவும், உக்ரேனிய சுற்றுலாப் பயணிளும் படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!