5286 பேருக்கு கொரோனா தடுப்பூசி!- யாருக்கும் பக்க விளைவுகள் இல்லை.

நேற்று 5286 பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1886 கொரோனா தடுப்பூசிகளும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் 803 கொரோனா தடுப்பூசிகளும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியாலையில் 781 கொரோனா தடுப்பூசிகளும் நாரஹேன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் 600 கொரோனா தடுப்பூசிகளும் பனாகொட இராணுவ முகாமில் 400 கொரோனா தடுப்பூசிகளும் பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 382 கொரோனா தடுப்பூசிகளும் ஹோமாகம வைத்தியசாலையில் 190 கொரோனா தடுப்பூசிகளும் முல்லேரியா வைத்தியசாலையில் 108 கொரோனா தடுப்பூசிகளும் ஐ.டி.எச். வைத்தியசாலையில் 80 கொரோனா தடுப்பூசிகளும் வெலிசற கடற்படை முகாமில் 56 கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஏற்றப்பட்ட கொரோனா தடுப்பூசிகளால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லையென அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!