ஆபத்து நேர்ந்தால் அட்மிரலே பொறுப்பு!

தனது உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் நேர்ந்தால் அமைச்சர் சரத் வீரசேகரவே அதற்கு பொறுப்பேற்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தனது உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்பு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினாலேயே தனக்கு தெரிவிக்கப்பட்டதாக சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தனது சிறப்பு பாதுகாப்பு தேவையென எந்த கோரிக்கையையும் வைக்கவில்லையென்றும், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற அடிப்படையில் தனக்கு அரசாங்கத்தால் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், இப்போது தனது உயிருக்கு ஏதேனும் நடந்தால் அமைச்சர் சரத் வீரசேகரவே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார். v தனக்கு எதிராக எந்த நீதிமன்றங்களிலும் பெயர் குறிப்பிட்ட தடையுத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை, தான் எந்த நீதமன்ற தடையுத்தரவையும் மீறவில்லையென்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!