என்னையும் சிறையில் அடையுங்கள்! – என்கிறார் நாமல்

எனக்கு அலோசியஸ் 800 முறை தொலைபேசி அழைப்பு கொடுத்திருந்தால், என்னிடம் வழங்கப்பட்ட பணம் இருந்தால் அவற்றை கண்டுபிடித்து என்னை சிறையில் அடையுங்கள் என்று தெரிவித்துள்ளார், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ.

அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து நான் 100 ரூபாயை பெற்றிருந்தால், நல்லாட்சிக்கு அமைய நான் சந்தேகநபர். அர்ஜூன் அலோசியஸ் அரசாங்கத்தின் சாட்சியாளராக இருந்திருப்பார்.

நாங்கள் திருடர்கள் என்று எங்களை விரல் நீட்டி காட்டியவர்கள் இன்று அலோசியஸ் முதலாளியின் சாராயத்தை பிரிக்க ஆரம்பித்துள்ளனர். பார்க்கும் போது விநியோகிப்பதும் இவர்கள் தான், அலோசியஸிடம் பணம் பெற்ற ஒரு பகுதியினர் பற்றிய தகவல்களே வெளியாகியுள்ளன. தற்போதைய அரசாங்கம் வங்களை கொள்ளையிட்டது போன்று மேலும் நாட்டில் பல கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன.

எனக்கு அலோசியஸ் 800 முறை தொலைபேசி அழைப்பு கொடுத்திருந்தால், என்னிடம் வழங்கப்பட்ட பணம் இருந்தால் அவற்றை கண்டுபிடித்து என்னை சிறையில் அடையுங்கள். ஆனால், பணத்தை பெற்றவர்களையும் சிறையில் அடையுங்கள். அப்போது நாங்கள் அனைவரும் ஒன்றாக சிறையில் இருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!