சுய தனிமைப்படுத்தலில் இளவரசர் ஹரியின் குடும்பம்!

மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் நிலை மோசமடைந்தால், உடனடியாக புறப்பட இளவரசர் ஹரி சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் ஹரியுடன் காதல் மனைவி மேகனும் அவர்களது குழந்தையும் இதுகாரணமக சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் பிலிப் திடீர் உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலை தொடர்பில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவரும் இளவரசர் ஹரிக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

எந்த நேரத்திலும் புறப்படத் தயாராக தனிப்பட்ட விமானம் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்து ஹரி புறப்படும் முன்னர் அவருக்கு கொரோனா சோதனை முன்னெடுக்கப்படும்.

பிரித்தானியா அறிவித்துள்ள சிகப்பு பட்டியலில் தற்போது ஸ்பெயின் நாட்டுடன் அமெரிக்காவும் இணைக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, இந்த நாடுகளில் இருந்து பிரித்தானியா வரும் பயணிகள் கண்டிப்பாக 10 நாட்கள் ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதால், இளவரசர் ஹரிக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானால், அவர் பிரித்தானியா வந்த பின்னர் தனிமைப்படுத்தலில் இருக்க தேவையில்லை.

இந்த நிலையில், தற்போது 5 மாத கர்ப்பிணியான மேகன் மெர்க்கல் தமது கணவருடன் பயணப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!