வெளிநாட்டு சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்கள்!

மத்திய, மாநில அரசுகளுக்கு, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- குவைத் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த குமரி மாவட்டம் ஆரோக்கியபுரம், மிடாலம், பள்ளம், சின்னவிளை, கொட்டில்பாடு கிராமங்களை சேர்ந்த ஆல்பர்ட் சேவியர், டயனஸ், காட்வின் ஜாண் வெல்டன், ஆரோக்கிய லிஜின்,ஜோசப்பெஸ்கி, ஜேசுதாஸ், சகாய விஜய், மிக்கேலடிமை, வெலிங்டன் ஆகிய 9 மீனவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி 15-ந் தேதி அன்று 3 படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது ஈரான் கடற்படை அவர்களை பிடித்து கைது செய்தது. ஒரு வருடமாகியும் அவர்கள் தொடர்ந்து சிறையில் தவிக்கின்றனர். இந்த மீனவர்களின் உறவினர்கள் அவர்களை நினைத்து வாடி வருந்துகின்றனர். எனவே மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!