முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளைய தினத்துடன் நிறைவு..!

அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளைய தினத்துடன் நிறைவடைகின்றன.

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சதாரணதர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்காரணமாக நாளை முதல் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!