க.பொ.த சாதரண தர பரீட்சை தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்த முக்கிய அறிவித்தல்..!

கல்விப்பொதுத்தராதர சாதராண தர பரீட்சை நடவடிக்கைகளின் போது அனைத்து சிசுசெரிய பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

சுகாதார வழிகாட்டுதலகளுக்கமைய சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்குவது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சிசுசெரிய பேரூந்துகளில் வெளிநபர்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தவிர்க்க முடியாத காரணங்களின் நிமித்தம் மாணவர் ஒருவரின் பெற்றோர் பாடசாலைக்கு வருகைதருவதற்கு நேரிடும் பட்சத்தில் அனுமதிவழங்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2020 ஆம்ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!