மார்ச் 7 கறுப்பு ஞாயிறாக அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி எதிர்வரும் 7ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக அனுஷ்டிக்கும் படி கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்த அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கோரும் போராட்டமாகக் கறுப்பு ஞாயிறு தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினத்தில் கத்தோலிக்க மக்கள் கறுப்பு நிறத்தில் உடை அணிந்து விசேட பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளும்படியும் பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கை பலதரப்பினராலும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!