மார்ச் 7 ஆம் திகதி ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவிருக்கும் சீமான்!

வருகிற மார்ச் 7 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்படுவர் என அக்கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களும் மார்ச் 7 ல் ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்படுவர் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

117 தொகுதிகளில் ஆண்கள், 117 தொகுதிகளில் பெண்கள் என 234 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகபடுத்தப்பட உள்ளனர். சென்னை ராயப்பேட்டை ஒய் எம்சிஏ மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!