போராட்டம் மேலும் வலுப்பெற வேண்டும்! – 8 ஆவது நாள் களத்துக்கு வந்த விக்கி தெரிவிப்பு.

பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள உணவுதவிர்ப்புப் போராட்டம் மேலும் வலுப்பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

நல்லூரில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 8-வது நாளான நேற்று கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதனை தான் வலியுறுத்துவதாகவும் அதற்கான அழுத்தத்தினை மக்கள் ஒழுங்கு செய்யும் சிறு சிறு போராட்டங்கள் ஊடாக பிரயோகிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் இந்தப் போராட்டம் மேலும் மேலும் வலுப்பெற்று சர்வதேச விசாரணையை சர்வதேச அரங்கில் வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!