மேல் மாகாணத்தின் அனைத்து வகுப்புகளும் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

மேல் மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படாத வகுப்புகள் அனைத்தும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மேல் மாகாண பாடசாலைகளின் தரம் ஒன்று முதல் நான்கு வரையான வகுப்புகள், 6 முதல் 10 வரையான வகுப்புகள் மற்றும் 12 ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளே எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 19 திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மேல் மாகாண பாடசாலைகளின் தரம் 13, தரம் 11 மற்றும் தரம் 5 ஆகிய வகுப்புக்களை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் திட்டமிட்டபடி எதிர்வரும் 15 ஆம் திகதி அனைத்து வகுப்புகளுக்குமான பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!