அரசியலில் இருந்து விலகிய சசிகலா எடுத்த அதிரடி முடிவு!

அரசியல் ஆசையை துறந்த சசிகலா, வரும், 15ம் தேதி முதல், ஆன்மிக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். வரும், 11ம் தேதி, சிவராத்திரி அன்று, சென்னை தி.நகரில் உள்ள அகத்தியர் கோவிலில் வழிபாடு செய்கிறார்.பொது எதிரி தி.மு.க.,வை வீழ்த்த, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், அ.தி.மு.க., – அ.ம.மு.க.,வினர் இணைந்து, ஜெயலலிதா ஆட்சியை அமைக்கும்படியும், சசிகலா வேண்டுகோள் விடுத்துஇருந்தார்.

‘இணைப்புக்கு சாத்திய மில்லை’ என்பதை, முதல்வர் இ.பி.எஸ்., திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன் நடந்த, சமரச பேச்சும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில், அவர் ஆன்மிக பயணம் செல்ல முடிவு செய்துள்ளார். வரும், 11ம் தேதி, சிவராத்திரி வருகிறது. அன்று இரவு, சென்னை தி.நகரில் உள்ள அகத்தியர் கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிடுகிறார். தொடர்ந்து, 15ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபட திட்டமிட்டுஉள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!