ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்து!

நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி மஹா சிவராத்திரி தினத்தை அனுஷ்டிப்பார்கள் என தாம் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்து மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்துக்கள் கடந்த வருடம் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மஹா சிவராத்திரி தினத்தை அனுஷ்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், உலகளாவிய ரீதியில் உள்ள இந்துக்கள் சிவபெருமானின் அருள் ஒளி கொண்டு அறியாமை இருள் அகற்றி ஞானத்தின் மகிமையை அடைவதற்கான பிராத்தனையுடன் பழங்காலத்தில் இருந்து மஹா சிவராத்திரி தினத்தி சமயக் கிரியையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியினை அடைதற்கும் சிவபெருமான் அருள்புரிய வேண்டுமென தாம் பிராத்திப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!