எழுவைதீவு கடலில் 141 கிலோ கஞ்சாவுடன் படகு!

எழுவைதீவு கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 141 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் யாழ்ப்பாணம், எழுவைதீவு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கண்கானித்து சோதனை செய்தனர். அப்போது அந்தப் படகில் இருந்து சுமார் 141 கிலோ கிராம் ஈரமான கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தனர். மேலும், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படை கைப்பற்றிய கேரள கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூபாய் 42.3 மில்லியன் ஆகும்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 மற்றும் 31 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

சந்தேக நபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!