இந்தியாவில் மீண்டும் தோன்றிய மர்மத்தூண்!

மர்மமான முறையில் தோன்றி மறையும் உலோகத்தூண் மும்பையில் உள்ள ஜோகர்ஸ் பூங்காவில் தோன்றியது சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மகராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள ஜோகர்ஸ் பூங்காவில் மர்மமான முறையில் தோன்றி மறையும் Monolith எனக் கூறுப்படும் உலோகத்தூண் ஒன்று நேற்று கண்டறியப்பட்டது.

இந்தியாவில் இரண்டாவது முறை தோன்றிய இந்த உலோகத்தூண், அங்கு பூங்காவிற்கு வந்திருந்த பொதுமக்களின் கவனத்தை பெற்றது. ஏழு அடி உயரம் கொண்ட முப்பட்டைக் கண்ணாடி வடிவில் இருந்த அந்த உலோகத்தூணின் புகைப்படத்தை மாநகராட்சி ஊழியர் ஒருவர், தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்தியாவில் முதல்முறையாக கடந்த டிசம்பர் மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இதேபோன்று உலோகத்தூண் ஒன்று தோன்றியது. மேலும் உலகளவில், இதுவரை அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளில் உலோகத்தூண் தோன்றி மறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!