அசாத் சாலி கைது!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத தடை சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் ஆற்றிய உரை தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!