முன்னாள் எம்.பி. யோகேஸ்வரன் பிணையில் விடுவிப்பு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் ஆஜராகி சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 07ஆம் திகதி வரை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் நடத்தப்பட்ட சாத்வீக பேரணியில் கலந்து கொண்டது சார்பாக திருக்கோவில் பொலிஸாராலும், பொத்துவில் பொலிஸாராலும் தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகள் நேற்று பொத்துவில் நீதவான் நீதிமன்றில் எனக்கு எதிராக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கான அழைப்பானை பொத்துவில் நீதிமன்றத்தால் வாழைச்சேனை பொலிஸ் நிலையம் ஊடாக நேற்றுமுன்தினம் மதியம் வழங்கப்பட்டது. இதனால் நேற்று நீதிமன்றில் நான் ஆஜரான நிலையில் எனது சார்பாக சட்டத்தரணி எஸ்.ஜெகநாதன் தலைமையிலான ஐந்து சட்டத்தரணிகள் வழக்கை பொறுப்பேற்று நடாத்தினர்.

பொலிஸாரின் வாதம் பலமாக அமையாததால் திருக்கோவில் பொலிஸாரால் நீதிமன்றில் கொண்டுவரப்பட்ட வழங்கிலிருந்து நான் நீக்கப்பட்டாலும் பொத்துவில் பொலிஸார் சார்பான வழக்கில் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளேன்.

அத்தோடு எனது அடுத்த வழக்கு எதிர்வரும் 2021.06.02ஆம் அன்று நீதிமன்றத்திற்கு வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!