திடீரென பின்னோக்கி ஓடிய ரெயில்: பயணிகள் கதி என்ன?

உத்தரகாண்டில் புர்னகிரி சதாப்தி விரைவு ரெயில் 35 கிலோமீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரெயில் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் ஆபத்தின்றி உயிர்தப்பினர்.

காத்திமா ரயில் நிலையம் வரை ஓடிய ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் பின்னர் பேருந்துகளில் தன்காபுர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மாற்று ரெயில் மூலம் அவர்கள் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.

தண்டவாளத்தில் மாடுகள் நின்றதால் பிரேக் போட்ட ரெயில் ஓட்டுனர், ஒரு மாடு மீது மோதிவிட்டதாகவும் அதன் பிரேக் கட்டுப்பாட்டை இழந்து ரெயில் பின்னோக்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது.ஒரு ரெயில் நிலையம் அருகே அந்த ரெயில் வேகமாக பின்புறம் கடந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!