சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு!

தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதை அடுத்து அனைத்து சர்வதேச விமானங்களுக்கு இடையான தடை அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கு அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் விமான பயணிகள் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச விமானங்களுக்கு அடுத்த மாதம் வரை தடை நீக்கப்பட்டாலும் இந்த தடை மேலும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!