அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 54 இந்தியர்கள் கைது!

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில இந்திய மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அத்துடன் குறித்த மீனவர்கள் பயணித்த 5 மீனவ படகுகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் நேற்று இரவு குறித்த இந்தியமீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கையூடாக குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!