பளையில் கார் மீது டிப்பர் மோதி 2 சிறுவர்கள் பலி! – தந்தை படுகாயம்.

கிளிநொச்சி – பளை, இத்தாவில் பகுதியில்நேற்று இரவு கார் – டிப்பர் மோதிய விபத்தில் 9, 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற கார் மீது எதிரே வந்த டிப்பர் மோதியுள்ளது. சம்பவத்தில் சிறுவர்கள் இருவர் பலியானதுடன் படுகாயமடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!