எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சப்ரகமுவ , மேல், மத்திய, வட மேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் இன்று 100 மில்லிமிற்றர் மழைவிழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், இடியுடன்கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படும் எனவும், இதனால் அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!