ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்கள்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 158 மில்லியன் டொலர் கடனுதவி பெறப்படவுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு,யாழ். மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறையிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலையிலும், இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன.

மண்டைதீவில் படகுகள் நங்கூரம் பாய்ச்சும் தரிப்பிடம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் தலா 8 மீன்பிடித் துறைமுகங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 மீன்பிடித் துறைமுகங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 மீன்பிடித் துறைமுகங்களும், திருத்தப்பட வேண்டியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

கட்டுமானம் மற்றும் மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் நங்கூரம் பாய்ச்சுமிடத்தின் அபிவிருத்தி, கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி ஆகிய மூன்று விடயங்களின் அடிப்படையில், இந்த திட்டத்துக்கான ஆலோசனைகளை நிறுவனங்களிடம் பெற்றுக் கொள்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும்- கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!