உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையினை கடந்த 15 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த அறிக்கையினை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு மேலும் 2 வாரகால அவசாசம் அமைச்சரவை உபகுழுவினால் கோரப்பட்டது.

இந்த நிலையில், குறித்த அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!