ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேருக்கு பிணை!

மத்தியவங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எட்டு பேர் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

குறித்த வழக்கு, கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளான அமல் ரணராஜா, நாமல் பாலாலே மற்றும் ஆதித்யா பதபெண்டிக ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பிரதிவாதிகள் ஒரு மில்லியன் பெறுமதியான ரொக்கப்பிணையிலும், தலா 10 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்கப்படுவதாக மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!