கண் இமைக்கும் நேரத்தில் துண்டான சிறுமியின் தலை: கதறி அழுத தாய்!

பேருந்தில் சென்று கொண்டிருந்த சிறுமி வாந்தி எடுக்க தலையை வெளியே நீட்டிய போது தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வாவிலிருந்து இந்தூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களை அழைத்துக்கொண்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பேருந்தில் இருந்த அந்த பெண்ணின் 11 வயது மகள் தமன்னாவுக்கு வாந்தி வந்துள்ளது. இதனால் பேருந்தின் ஜன்னல் வழியாக தலையை நீட்டி தமன்னா வாந்தி எடுக்க முயற்சி செய்த்துள்ளார்.

அப்போது எதிர் திசையில் வந்த ட்ராக்டர் ஒன்று சிறுமியின் தலையில் மோதியது. அதில் சிறுமியின் தலை துண்டானது. அடுத்த நொடி சிறுமி தமன்னா துடிதுடித்து இறந்து போனார். இதனால் பதறிப்போன அவரது தாய் கண்ணீா் விட்டு கதறி அழுதார்.

ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று அனைவரும் சுதாரிப்பதற்குள் சிறுமியின் உயிர் பறிபோனது. இதைப்பார்த்த பேருந்தில் இருந்த மக்கள் அனைவரும் உறைந்து போனார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!