இந்திய தடுப்பூசிக்கு தடை விதித்த பிரபல நாடு!

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிராக கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கிய நிலையில், அதற்கு பிரேசில் தடை விதித்துள்ளது. உலகையே ஆட்டப்படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எப்போ தான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்று பலரிடையே எதிர்பார்ப்பு இருந்தது. அதன் படி இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது.

இருப்பினும் சில கொரோனா தடுப்பூசிகள் கடும் விளைவுகளை ஏற்படுத்துவதை அறிய முடிந்தது. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கியது.

கோவேக்சினுக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கும் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்துகளை இந்தியா மனிதாபிமான அடிப்படையில் தனது அண்டை நாடுகளுக்கு வழங்கி வருகிறது.

இதற்கிடையே 2 கோடி கோவேக்சின் தடுப்பு மருந்தை பிரேசில் நாடு ஆர்டர் கொடுத்து இருந்தது. ஆனால் திடீரென்று கோவேக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதை நிரூபிக்க உரிய ஆவணம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால், பயோடெக் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், பிரேசில் சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டிய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வோம். இதற்கான காலக்கெடு குறித்து பிரேசிலுடன் ஆலோசித்து வருவதாகவும், இந்த விவகாரம் விரைவில் சுமூகமாக தீர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!