இந்தோனேசியாவில் சரக்கு கப்பலுடன் மோதிய மீன்பிடி படகு: 17 மீனவர்கள் மாயம்!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் மீன்பிடி படகுடன் சரக்கு கப்பல் மோதிய விபத்தில் 17 மீனவர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மாயமான 17 மீனவர்களையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்திராமாயு ரீஜென்சி அருகாமையில் சனிக்கிழமை மாலை ஒரு மீன்பிடி படகுடன் பெரிய சரக்குக் கப்பல் ஒன்று மோதியுள்ளது.

இதில் அந்த மீன்பிடி படகானது கவிழ்ந்துள்ளது. இந்த நிலையில் அந்த மீன்பிடி படகில் இருந்த 32 மீனவர்களும் கடலில் மூழ்கியுள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையால் 15 மீனவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

ஆனால் 17 மீனவர்கள் மாயமாகியுள்ளதால் அவர்கள் நிலை தொடர்பில் அச்சம் எழுந்துள்ளது.

மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!