ஹிட்லராக மாறுவதற்கு வாக்களிக்கவில்லை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஹிட்லர் போன்று மாறுவாரென்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ராஜபக்சவினர் ஹிட்லருக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்று முருந்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும், அமைச்சர்கள் பிரபலமடைவதற்காக இவ்வாறு கூறுகின்றார்களா என்பது தெரியவில்லை. உண்மையில் நாம் கண்டிக்கிறோம்.

69 இலட்சம் வாக்குகளும் இதற்காகவே கிடைத்தது என எவரும் பொய் சொல்ல முடியாது. இந்த வாக்குகள் என்னாலேயே கிடைத்தது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாயை திறந்து கூறலாம், அவர் மீதான நம்பிக்கையினால் தான் 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தது.

மேலதிகமாக 5 இலட்சம் வாக்குகள் கிடைத்தது. அந்த 5 இலட்சம் வாக்குகள் தற்போது இழக்கப்பட்டுள்ளது. ஹிட்லராக மாறவே வாக்களித்ததாக எவராவது கூறினால் அவர்களுக்கு எமது மக்கள் தகுந்த பதிலளிப்பர் என்றும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!