நடுவழியில் நின்றது யாழ்தேவி!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணம் செய்த யாழ் தேவி ரயில் இயந்திரக் கோளாறு காரணமாக ஓமந்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து நேற்றுக் காலை 6.25 மணியளவில் புறப்பட்ட யாழ் தேவி வவுனியா, ஓமந்தையை கடந்து புளியங்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து ரயில் இழுத்து வரப்பட்டு ஓமந்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் யாழ்தேவியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொடிகாமம் உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற பயணிகள் பலரும் ஓமந்தையில் தங்கியுள்ளனர். அவர்களை கொழும்பில் இருந்து யாழ் நோக்கி செல்லும் அதிவேக சொகுசு ரயிலில் மாற்றி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை புகையிரத திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!