கணவரின் இரண்டாவது மனைவியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் தாய்: இருவரும் செய்த மற்றுமொரு கொடூரம்!

ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு 15 வயதில் ஒரு மகனும், 6 வயதில் இரு மகனும் உள்ளனர். ராமலிங்கத்துக்கு இரண்டு மனைவிகள். இந்த சிறுவர்கள் தங்களது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோருடன் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அதில், “தனது தந்தை ராமலிங்கம் இந்துமதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். எங்களுடைய தாய் ரஞ்சிதா. மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்துவந்தோம். எங்கள் தாய் ரஞ்சிதா, தனலட்சுமி என்ற பெண்ணுடன் ஓர் பாலின திருமணம் செய்துகொண்டார். இவர்கள் அனைவரும் சேர்ந்து எங்களை கொடுமைப்படுத்துகின்றனர். எங்களை படிக்க விடாமல் வீட்டு வேலைகளை செய்ய வைக்கின்றனர்.

பாத்ரூம் கழுவ வைக்கின்றனர். சாப்பாட்டில் மிளகாய் பொடியை கொட்டி கொடுக்கின்றனர். பாத்ரூமில் தான் தூங்குகிறோம். ரஞ்சிதா சக்தியாகவும், அவர் திருமணம் செய்துகொண்ட தனலெட்சுமி சிவனாகவும் வேடமிட்டு வந்து எங்களை மிரட்டுவதோடு நரபலி கொடுக்கப்போவதாக பயமுறுத்துகின்றனர். இதனால் பயந்து தாத்தா, பாட்டியிடம் தஞ்சம் அடைந்துள்ளோம்.” என தெரிவித்திருந்தனர்.

சிறுவர்களின் புகாரையடுத்து சிறுவர்களை கொடுமைப்படுத்திய ராமலிங்கம், ரஞ்சிதா, தனலெட்சுமி மற்றும் இந்துமதி ஆகிய 4 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!