கட்டுநாயக்கவுடன் நின்றது இளைஞனின் கனடா பயணம்!

போலி விசாவைப் பயன்படுத்தி டுபாய் வழியாக கனடாவுக்குச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, ஆரையம்பதியில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்

சந்தேகநபர் இலங்கையை விட்டு டுபாய்க்கு செல்ல திட்டமிட்டு நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். சந்தேகநபர் சமர்ப்பித்த கனேடிய விசாவில் உள்ள சிக்கல்கள் காரணமாக, விமான நிலைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் சந்தேகநபரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

இதன்போது நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் கனேடிய விசா போலியானது என்பது தெரியவந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!