சிறைச்சாலைகளுக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுசெல்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போதைப்பொருள் உட்பட தடைசெய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலைகளுக்குள் கொண்டுசெல்லும் வெளிநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பண்டிகைகாலத்தில் சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் உட்பட தடைசெய்யப்பட்ட மருந்துபொருட்கள் கொண்டவரப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்

இதன்படி மெகசின் சிறைச்சாலை, களுத்துறை சிறைச்சாலை வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவு சிறைச்சாலை வைத்தியசாலை தடுப்புக்காவல் நிலையங்களில் வெளிநபர்கள் ஊடாக போதைப்பொருட்கள் கையடக்க தொலைபேசிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

எனவே போதைப்பொருள் உட்பட தடைசெய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலைகளுக்குள் கொண்டுசெல்லும் வெளிநபர்கள் அடையாளங் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!