ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொடூரமாக கொன்ற கொலையாளி!

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அமராவதியில் ஜுடடா கிராமத்தை சேர்ந்த ராமாராவ்(65), உஷா ராணி (35), உதய் (2), ஊர்வசி (6 மாத குழந்தை), ரமா தேவி (53) மற்றும் அருணா (37) ஆகியோர் தான் கொலை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள்.

இவர்கள் வீட்டுக்குள் அப்பல்ராவ் என்பவர் நேற்று அதிகாலை நுழைந்துள்ளார். பின்னர் ஆறு பேரையும் புற்களை வெட்டும் அரிவாளை கொண்டு வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடினார்.

பின்னர் அப்பல்ராவ் தானாக சென்று பொலிசில் சரணடைந்துள்ளான். இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான முன் பகை தான் இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது அப்பல்ராவ் குடும்பத்தினர் ராமாராவ் குடும்பம் வசிக்கும் வீட்டின் அருகிலேயே வசித்து வந்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு இரு குடும்பத்துக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

இதன்பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்திருக்கின்றனர், இந்த நிலையில் தான் இந்த கொடூர கொலைகள் நடந்துள்ளது.

இதை தொடர்ந்து இரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்த 6 சடலங்களையும் பொலிசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!