அச்சுறுத்தி அடக்க முயல்கின்றனர்- அடங்கும் இனமல்ல நாம்!

சிலர் அச்சுறுத்தலை விடுத்து எம்மை மௌனிக்க செய்ய முனைகின்றனர். அச்சுறுத்தலுக்கு பயந்து ஔிந்தோடும் இனமல்ல நாம் என்று முருந்தொட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

‘நாட்டைப் பாதுகாக்க வேண்டும். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு முன் நோக்கி திட்டத்தை நாங்கள் 100% ஆதரிப்போம். ஆயினும் யாராக இருந்தாலும் தேவையற்ற விடயங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டால் மௌனித்திருக்க மாட்டோம்.

இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தை பயன்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. சந்தர்ப்பவாத தேரர்கள் சிலர் பின்வாங்கினாலும் இவ்வாறான அச்சுறுத்தல் அடக்குமுறைகளுக்கு பயந்து, மீகெட்டுவத்தே குணானந்த தேரரின் வம்சத்தில் செயற்படும் எந்தவொரு பிக்குவும் மெளனித்திருக்கப் போவதில்லை.

மாகாணசபை முறையை நாங்கள் எதிர்க்கிறோம். எவ்வாறு எதிர்த்தாலும் மாகாணசபை தேர்தலை நடத்தியே ஆகுவோம் என சிலர் தெரிவிக்கின்றனர். அப்படியானால் இது தொடர்பாக யார் எதிர்த்தாலும், யார் அச்சுறுத்தினாலும் மாகாணசபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வோம் என்பதை இவர்களுக்கு தெரிவிக்கின்றோம்.’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!