முல்லைத்தீவில் மோதிக் கொண்ட சிங்கள மீனவர்கள்! – ஒருவரின் விரல் துண்டானது.

முல்லைத்தீவு -நாயாறு பகுதியில் அமைந்துள்ள சிங்கள மீனவர்களின் வாடியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்தி வெட்டில் முடிந்துள்ளது. நேற்றுமுன்தினம் மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புத்தளம்,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இங்கு வாடி அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் புத்தளம் கலாவத்தை பகுதியைச் சேர்ந்த 41 அகவையுடைய மீனவர் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கத்தியால் வெட்டிய குமன்னாரை சேர்ந்த நபரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!