24 மணி நேரத்தில் 6 உயிர்களை காவுகொண்ட வாகன விபத்துக்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேநேரம், கடந்த 13 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 75 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

08 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,000 பேர் காயமடைந்துள்ளனர்.

அதிக வேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை ஆகிய காரணங்களினால் இந்த விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!