யாழ்ப்பாணத்தில் 16 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 16 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோப்பாய் வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், யாழ். மாநகர எல்லைக்குள் நால்வர், யாழ். சிறைச்சாலையில் ஐவர், சாவகச்சேரி வைத்திய அதிகாரி பிரிவில் மூவர், யாழ். போதனா வைத்தியசாலையில் மூவர் என 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!