சர்வதேச புலிகளால் சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் – சஜித் தெரிவிப்பு..!

ஒருமித்த இலங்கையை ஏற்படுத்த செயற்ப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு, வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகளின் உறுப்பினர்களினால் அச்சுறுத்தல்கள் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்க்பட்ட ஊழலுக்கு எதிரான நாடாளுமன்ற குழுவினையே அரசியல் பழிவாங்கல் நிறைந்த ஒன்றாக பெயரிட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சீ தொலவத்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் தரப்பை இல்லாது செய்யும் நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்கரணவக்க கூறுகின்றார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தை போன்று அரசியல் பழிவாங்கல்களில் தற்போதைய அரசாங்கம் ஈடுபடவில்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மரணதண்டனை விதிக்கபட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் அளவிலேயே குறித்த அறிக்கை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!