தமிழீழத்தை எதிர்த்தவர்கள் சீன ஈழத்தைத் தோற்றுவிக்க முயற்சி!

தமிழீழத்தை எதிர்த்தவர்கள், இப்போது சீன ஈழத்தைத் தோற்றுவிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டின் இறையாண்மை மற்றும் தனித்துவமே பாதிக்கப்படும். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழீழத்தைத் தர முடியாதெனக் கூறியவர்களே தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!