வத்தளையில் 18 வயது யுவதி கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..!

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆணொருவர் பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பெண்ணொருவர் மற்றும் மஹரகம பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண்ணொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!