கொழும்புக்கு வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி!

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி அடுத்த மாதம் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சீன பாதுகாப்பு அமைச்சர் ஃபெங் கடந்த வாரம் நாட்டிற்கு வந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் இணக்கம் வெளியிட்டிருந்தன.

கடந்த ஆண்டு சீன கம்யூனிசக்கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பணியக உறுப்பினரும், மத்திய குழுவின் வெளியுறவு ஆணையத்தின் அலுவலக இயக்குநருமான யாங் ஜீச்சியும் கொழும்பில் இருதரப்பு கலந்துரையாடல்களுக்காக வருகைத்தந்தார்.

இந்தநிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் தனது பிராந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வரவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!