துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் -உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகருக்கு கையளிப்பு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு நேற்று இரவு தனக்குக் கிடைக்கப் பெற்றதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம், உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு கிடைக்கப் பெறாமை காரணமாக திட்டமிட்டபடி, நேற்றைய தினம் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!