அடுத்த சட்டமா அதிபராக தமிழர்?

இலங்கையின் அடுத்த சட்டமா அதிபராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. தற்போது பதில் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துவரும் சஞ்ஜய் ராஜரட்ணமே சட்டமா அதிபராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் இவரது பெயரை பிரேரித்து அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தற்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!