மஹிந்தவுக்கு கிடைத்த வெளிநாட்டு நிதி – விசாரணை நடத்தக் கோருகிறார் பொன்சேகா!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்த வழிமுறைகள் தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை நடத்துமாறு அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சீனா பணம் வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

வேறு நாடுகளில் இருக்கின்ற வர்த்தகர்கள் மற்றும் பெரிய வர்த்தகர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் சட்டவிரோத தொடர்புகளை வைத்திருந்ததாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். அந்த வர்த்தகர்களால் நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!