யாழ்ப்பாணத்தில் மேலும் 3 கொரோனா சிகிச்சை நிலையங்கள்!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று கொரோனா சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் நாவற்குழியில் அமைந்துள்ள அரச கஞ்சியக் கட்டடம் ஆகியவை கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வயாவிளானில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலும் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது.

நாவற்குழி அரச களஞ்சியம் 300 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட சிகிச்சை நிலையமாக அமைக்கப்படவுள்ளது. அத்துடன், வட்டுக்கோட்டை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வயாவிளான் கட்டடம் போன்றவற்றில் இடவசதிக்கு அமைய படுக்கைகளிள் எண்ணிக்கை அமைக்கப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!